பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் எலிசபெத் சுராஜ். கனா காணும் காலங்கள். அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது போதிய வாய்ப்பு இன்றி தவிக்கும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
சினிமாத்துறை , தொலைகாட்சி துறை அன்பர்களுக்கு, எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகருக்கு தராதீர்கள். நான் மூழ்கி கொண்டிருக்கிறேன். மரணித்த பின் எனக்காக அழ வேண்டாம். இரங்கல் கடிதம் எழுத வேண்டாம். நான் உயிரோடு இருக்கும்போது உதவி கரம் நீட்டுங்கள். பிழைத்து கொள்வேன் .
நான் சார்ந்த சங்கங்களின் உயர் பதவியில் உள்ளவர்கள் கேட்க தவறியதை நான் கேட்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. என் போன்ற நிறைய நடிகர்களுக்காகவும் ஒலிக்கும் என் குரல். நான் கரை ஏறிய பின் அநேகருக்கு கரம் கொடுப்பேன். என்று எழுதியுள்ளார்.