மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் எலிசபெத் சுராஜ். கனா காணும் காலங்கள். அனுபல்லவி, கலாட்டா குடும்பம், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது போதிய வாய்ப்பு இன்றி தவிக்கும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வாய்ப்பு கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
சினிமாத்துறை , தொலைகாட்சி துறை அன்பர்களுக்கு, எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை வேற்று மாநில நடிகருக்கு தராதீர்கள். நான் மூழ்கி கொண்டிருக்கிறேன். மரணித்த பின் எனக்காக அழ வேண்டாம். இரங்கல் கடிதம் எழுத வேண்டாம். நான் உயிரோடு இருக்கும்போது உதவி கரம் நீட்டுங்கள். பிழைத்து கொள்வேன் .
நான் சார்ந்த சங்கங்களின் உயர் பதவியில் உள்ளவர்கள் கேட்க தவறியதை நான் கேட்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. என் போன்ற நிறைய நடிகர்களுக்காகவும் ஒலிக்கும் என் குரல். நான் கரை ஏறிய பின் அநேகருக்கு கரம் கொடுப்பேன். என்று எழுதியுள்ளார்.