ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி 'சூப்பர் டாடி'. ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. ரன்னர் பட்டத்தை வினோத் மற்றும் மகள் திரிஷிகா வென்றனர். அவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை 'என்னம்மா' ராமரும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் , நான்காவது இடத்தை மதுரை முத்து மற்றும் மகள் யாழினி, ஐந்தாவது இடத்தை கொட்டாச்சி மற்றும் மகள் மானஸ்வி ஆகியோர் பிடித்துள்ளனர். பல நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நுழைந்து சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தை வென்ற நடிகர் கிங் காங்கிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.