ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிரபல மாடலான கண்மணி மனோகரன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையானார். அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வந்த கண்மணி சமீபத்தில் தொடரை விட்டு விலகினார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் அவர், 'பாரதி கண்ணம்மாவின் அஞ்சலி கேரக்டரை ரொம்பவே மிஸ் பன்றேன். அந்த கேரக்டர் தான் நடிகையாக எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. அஞ்சலி கேரக்டருக்காக நிறைய இழந்திருக்கேன். நான் எப்போதுமே ஒரு நேரத்தில ஒரு ப்ராஜெக்ட் எடுத்து என்னோட 100 சதவீத உழைப்பை கொடுப்பேன். அதனால, பல வாய்ப்புகள் கிடைச்சும் அத பயன்படுத்திக்க முடியாம போச்சு. அஞ்சலியா மூனு வருஷம் கடந்தாச்சு. இனி அடுத்த கட்டத்துக்கு போக முடிவு பண்ணேன். அதுக்காக தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறினேன்' என்று கூறியுள்ளார்.
இரண்டாம் கதாநாயகியான அஞ்சலி கதாபாத்திரம் ஆரம்பத்தில் கண்ணம்மா எதிரான வில்லி கதாபாத்திரமாக கலக்கி வந்தது. வெண்பா என்ற புதிய வில்லி வந்தவுடன் அஞ்சலி கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்தது. இந்நிலையில் தான் கண்மணி மனோகரன் சீரியலை விட்டு வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழ் டிவியின் புது சீரியலில் கதநாயகியாக நடித்து வருகிறார்.