‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர்.
இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஷில்பா நடிக்கிறார். அவர் நடித்த காட்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரிக்கான ஓப்பனிங் சீனிலேயே, அவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்று விடுகிறார். படையப்பா நீலாம்பரி போல கெத்தாக நுழையும் இந்த கதாபாத்திரம் சீரியலிலுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.