நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் நன்றாக இருக்கிறது.
இந்த நிலையில் காந்தாரா 2 படக்குழுவினர் ரிஷப் ஷெட்டி தலைமையில் டில்லி முதல் முதலமைச்சர் ரேகா குப்தாவை நேரில் சந்தித்துள்ளனர். காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்த முதல்வர் ரேகா குப்தா அந்த படம் குறித்தும் இந்தியாவின் ஆன்மிக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அது படமாக்கப்பட்ட விதம் குறித்தும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் ஷெட்டி கூறும்போது, “டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா காந்தாரா சாப்டர் 1 படம் பார்த்துவிட்டு எங்களை அழைத்து பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அவரது பாராட்டுக்கள் இதுபோன்று இன்னும் மன் மணம் சார்ந்த படங்களை எடுப்பதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.