ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாடகராக, குழந்தை நட்சத்திரமாக இருந்த பூவையார் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛ராம் அப்துல்லா ஆண்டனி'. ஜெயவேல் இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து பூவையார் பேசுகையில் '' 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார்.
இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு எல்லாமே. நான் பாடிக்கொண்டே இருப்பேன். கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என் அம்மாவை நினைத்து பார்க்கிறேன். அவர் என் குழந்தையாக அடுத்து பிறக்க வேண்டும். நான் அவர் மகனாக எப்போதும் பிறக்க வேண்டும்' என்றார்.