டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் புலி ராகவேந்திரன் இந்த தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்கப்படும் என்பதையும் புலி ராகவேந்திரன் உருக்கத்துடன் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு வேறு வேலை பார்க்கப்போவதாகவும் மாறன் கூறியிருந்தார்.
மாறன் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில் சகநடிகை மற்றும் தோழியுமான ப்ரியங்கா குமாருக்கு மாறன், தொடரை விட்டு நீங்கும் முன் அழகான கரடி பொம்மை ஒன்றை புலி ராகவேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.




