மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் புலி ராகவேந்திரன் இந்த தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்கப்படும் என்பதையும் புலி ராகவேந்திரன் உருக்கத்துடன் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு வேறு வேலை பார்க்கப்போவதாகவும் மாறன் கூறியிருந்தார்.
மாறன் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில் சகநடிகை மற்றும் தோழியுமான ப்ரியங்கா குமாருக்கு மாறன், தொடரை விட்டு நீங்கும் முன் அழகான கரடி பொம்மை ஒன்றை புலி ராகவேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.