24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் |
பிரபல நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி புதிய தொடர் ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தமிழில் விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா தென்னிந்திய மொழிகளில் சீரியல்கள் நடித்து வந்தார். கடைசியாக 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்து வந்த இவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். கன்னட மொழியில் 'ரங்கநாயகா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படம் தள்ளிப்போனது.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் சேனலில், 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய சீரியலில் நடிக்க ரச்சிதா மஹாலெட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதன் போஸ்டர் லுக்குகள் தற்போது வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட சன் டிவியின் 'கயல்', ஜீ தமிழின் 'ரஜினி' சீரியல்களை போலவே 'சொல்ல மறந்த கதை' ரச்சிதாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதன் மோஷன் போஸ்டரை தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா, சமூகத்தில் தனது குழந்தையுடன் கணவர் துணை இல்லாமல் வசித்து வரும் பெண் பற்றிய கதை என குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள், புரோமோக்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.