என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தில் புது நடிகர் நடிக்க இருப்பதை தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.