பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை |
இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவரே பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''அடுத்து ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து' சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக்கதை.
அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்' என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அவன் படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தவிர, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன்தாஸை வைத்து படம் இயக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார். ஆக, அடுத்து 3 படங்களில் பார்த்திபன் தீவிரமாக இருக்கிறார்.