பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கர். பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என்பது என் கருத்து. அது ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதேசமயம் ‛ரெமோ' படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் ஒரு படம் இயக்கலாம்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தே தீருவோம் என இயக்குனர் பொன்ராம் கங்கணம் கட்டி நிற்கிறார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். வளர்ந்து வரும் இளம் நாயகனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்தை எடுத்தே தீருவோம். போட்றா வெடிய' எனக்கூறியுள்ளார்.