இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
‛கட்டில்' படப்புகழ் கணேஷ்பாபு, தயாரித்து, இயக்கி, எழுதியுள்ள படம் ‛கருவறை'. ரித்விகா, மிதுன், அஞ்சனா தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹங்கேரியில் நடக்க உள்ள பேரடைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கணேஷ்பாபு பேட்டி: தாயின் கருவறையில் உள்ள பிறக்கப் போகும் தம்பிக்காக சிறுமி கதை சொல்லிக் கொண்டிருக்ககிறாள். தாயோ குடும்ப சூழல் காரணமாக கருவை கழிவறையில் கழுவி தள்ளுகிறாள். இப்படி ஒரு காட்சி கருவறை படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இதில் கதை சொல்லும் சிறுமியாக நடித்த அஞ்சனா தமிழ்செல்வியும் கருவிலேயே களையப்பட இருந்தவர்.
கருக்கலைப்பை மையமாக கொண்ட இப்படத்தின் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இன்று நம் நாட்டில், குழந்தையின்றி அவதிப்படும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதேவேளையில், குழந்தையை அநாயசமாக கலைக்கவும் செய்கின்றனர். கருக்கலைப்பு என்பது 10ல் 7 பேர் வாழ்க்கையில் நடந்துள்ள விஷயமாக உள்ளது. ஆனால் இதை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. கருக்கலைப்பால் உடல் மற்றும் மனரீதியாகவும் பலர் பாதிக்கின்றனர். இன்று வீட்டுக்கு வீடு, கருக்கலைப்பு பிரச்னை உள்ளது. ஆனால் அது வெளிப்படையாக பேசுவதில்லை' என்றார்.