பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
‛கட்டில்' படப்புகழ் கணேஷ்பாபு, தயாரித்து, இயக்கி, எழுதியுள்ள படம் ‛கருவறை'. ரித்விகா, மிதுன், அஞ்சனா தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹங்கேரியில் நடக்க உள்ள பேரடைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கணேஷ்பாபு பேட்டி: தாயின் கருவறையில் உள்ள பிறக்கப் போகும் தம்பிக்காக சிறுமி கதை சொல்லிக் கொண்டிருக்ககிறாள். தாயோ குடும்ப சூழல் காரணமாக கருவை கழிவறையில் கழுவி தள்ளுகிறாள். இப்படி ஒரு காட்சி கருவறை படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இதில் கதை சொல்லும் சிறுமியாக நடித்த அஞ்சனா தமிழ்செல்வியும் கருவிலேயே களையப்பட இருந்தவர்.
கருக்கலைப்பை மையமாக கொண்ட இப்படத்தின் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இன்று நம் நாட்டில், குழந்தையின்றி அவதிப்படும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதேவேளையில், குழந்தையை அநாயசமாக கலைக்கவும் செய்கின்றனர். கருக்கலைப்பு என்பது 10ல் 7 பேர் வாழ்க்கையில் நடந்துள்ள விஷயமாக உள்ளது. ஆனால் இதை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. கருக்கலைப்பால் உடல் மற்றும் மனரீதியாகவும் பலர் பாதிக்கின்றனர். இன்று வீட்டுக்கு வீடு, கருக்கலைப்பு பிரச்னை உள்ளது. ஆனால் அது வெளிப்படையாக பேசுவதில்லை' என்றார்.