நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

இந்தியா முழுக்க நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியில் நடக்கும் 9 நாள் திருவிழா பதுக்கம்மா. இந்த நாட்களில் தெலுங்கனா பெண்கள், வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து இறைவனை வழிபடுவார்கள். வண்ண வண்ண உடைகள், ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். வண்ண மலர் கோலமாக இந்த விழா இருப்பதால் இதனை தெலுங்கான வண்ணவிழா என்றும் அழைப்பாளர்கள்.
பூக்களை கொண்டு கொண்டாடப்படுவதால் தெலுங்கானாவின் ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசமான பூக்களை கொண்டு, இத்திருவிழா வண்ணக்கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தெலுங்கனாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும்.
இந்த விழாவை பற்றிய தனிப் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானும், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இணைந்து உருவாக்குகிறார்கள். மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி உள்ளார். தெலுங்கானா ஜகுர்தி என்ற அமைப்பின் சார்பில் எம்எல்சி.கே.கவிதா இதனை தயாரித்துள்ளார்.
இப்பாடல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.