ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

காதலித்து திருமணம் செய்து, நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளனர். இதுப்பற்றி நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா டுவிட்டரில், ‛‛கனத்த இதயத்துடன் இதை பகிர்கிறேன். சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிரிவு துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடக்கும் விஷயங்கள் அவர்களின் தனிப்பட்டவை. அதில் தலையிட முடியாது. ஆனாலும் இருவரும் என்னுடைய பிரியத்திற்குரியவர்கள். சமந்தாவை எப்போதும் எங்கள் குடும்பம் ஆதரிக்கும். அவர் எங்கள் குடும்பத்தில் இருந்த ஒவ்வொரு தருணங்களும் மறக்க முடியாதது. இந்த நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க கடவுளை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.




