பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா தமிழில் அதன்பிறகு ஜெயம் ரவி, விஷால், விஜய்சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். இந்த வருடம் அதிக படங்களில் நடித்து வரும் நடிகையும் அவர்தான்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி ஜோடியாக இவர் நடித்த துக்ளக் தர்பார் படம் வெளியானது. ஆனால் ராஷி கண்ணாவுக்கு அது ராசியான படமாக அமையவில்லை. இந்த நிலையில் வரும் வாரங்களில் அவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. வரும் அக்-7ஆம் தேதி மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக அவர் நடித்துள்ள பிரம்மம் என்கிற படம் ரிலீஸ் ஆகிறது. இது ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். அந்தாதூன் வெற்றி பெற்றது போலவே பிரம்மம் படமும் வெற்றிபெறும் என்றும் நம்புகிறார் ராஷி கண்ணா.
அதேபோல அதற்கு அடுத்த வாரம் சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யாவின் ஜோடியாக இவர் நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படமும் வெளியாகிறது. ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது பாகமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் எனவும் அதன்மூலம் தமிழில் தனது இடத்தை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் திடமாக நம்புகிறார் ராஷி கண்ணா. வரும் காலங்களில் ராஷி கண்ணாவின் ராசி எப்படி ஒர்க் அவுட் ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.