பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தங்கள் கதைக்கான ஹீரோக்கள் கிடைக்காதபோதோ அல்லது ஹீரோக்களுக்கு கிடைக்கும் வசதிகள், மரியாதையை பார்க்கும்போதோ தாங்களும் ஹீரோவாகி விடலாம் என்கிற எண்ணம் சில இயக்குனர்களுக்கு ஏற்படும். இயக்குனர் சேரன், பிரவீன் காந்தி முதல் ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் வரை இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அரிதாரம் பூசியவர்கள் தான். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் கோமாளி இயக்குனர்.. அதாவது கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு அம்னீசியா என்கிற நோயை பின்னணியாகக் கொண்டு கோமாளி என்கிற படத்தை கலகலப்பாக உருவாக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டு வருடங்களாகியும் அவரது புதிய பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அதனால்தான் அவரது இரண்டாவது படம் இவ்வளவு தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.