பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தங்கள் கதைக்கான ஹீரோக்கள் கிடைக்காதபோதோ அல்லது ஹீரோக்களுக்கு கிடைக்கும் வசதிகள், மரியாதையை பார்க்கும்போதோ தாங்களும் ஹீரோவாகி விடலாம் என்கிற எண்ணம் சில இயக்குனர்களுக்கு ஏற்படும். இயக்குனர் சேரன், பிரவீன் காந்தி முதல் ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் வரை இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அரிதாரம் பூசியவர்கள் தான். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் கோமாளி இயக்குனர்.. அதாவது கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு அம்னீசியா என்கிற நோயை பின்னணியாகக் கொண்டு கோமாளி என்கிற படத்தை கலகலப்பாக உருவாக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டு வருடங்களாகியும் அவரது புதிய பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அதனால்தான் அவரது இரண்டாவது படம் இவ்வளவு தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.