எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பான்-இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 1', ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
'ராதே ஷ்யாம்' படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவித்துவிட்டார்கள். இன்று 'புஷ்பா 1' படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகத்தை 2022 அல்லது 2023ம் ஆண்டு வெளியிட உள்ளார்கள்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'புஷ்பா 1' படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்துபவராக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் பாசில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.