ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பான்-இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்', சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 1', ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
'ராதே ஷ்யாம்' படம் பொங்கல் வெளியீடாக வரும் என்று அறிவித்துவிட்டார்கள். இன்று 'புஷ்பா 1' படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகத்தை 2022 அல்லது 2023ம் ஆண்டு வெளியிட உள்ளார்கள்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'புஷ்பா 1' படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்துபவராக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் பாசில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.