பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தா தற்போது அவரை நான்கு மாதமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்துக்கு காத்திருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் வரை நாகசைதன்யா சமந்தாவுக்கு தரவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒன்று கலக்க விட்டதில்லை. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றுகிறேன். அவரும் அதையே செய்கிறார். இன்று ஒரு செய்திக்கு பின், அடுத்த செய்தி நொடியில் வந்து விடுகிறது. முந்தையை செய்தியை, புதிய செய்தி நீர்த்து போகச் செய்துவிடுகிறது. மக்கள் மனதில் எந்த செய்தியும் நீடிப்பதில்லை. உண்மையான செய்தி மட்டுமே மக்களிடையே தங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.