ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தொண்ணூறுகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் டான்சராக அறிமுகமாகி, அதன்மூலம் கிடைத்த புகழால் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா, நடிப்புத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிரபுதேவா பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டு டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் டைரக்சனில் தொய்வு ஏற்படவே பீல்டில் நிலைத்து நிற்பதாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இப்போதுகூட அவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உட்பட நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் டைரக்சனை விட அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இந்தநிலையில் டைரக்சனில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவரும் பிரபுதேவா, கடைசியாக இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய தபாங்-3, ராதே இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதனால் இனி டைரக்சனுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர நடிகராக தனது சினிமா பயணத்தை தொடர முடிவு செய்துள்ளாராம் பிரபுதேவா.




