புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் சார்பில் நிறைய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே ஏற்பட்ட பயத்தில் தனுஷ் என்ற மாணவனும், நீட்தேர்வு எழுதிய பிறகு கனிமொழி என்ற மாணவியும் பயத்தில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சோசியல் மீடியாவில் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார் சூர்யா.
அப்படி அவர் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛என் தம்பி தங்கைகளுக்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,' என்ற பாரதியாரின் வரிகளுடன் தொடங்கி அறிவுரை வழங்கியிருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்று நினைக்கும் மாணவ மாணவிகள் நீட் தேர்வை கண்டு அஞ்சக் கூடாது. அதற்கு மரணம் எந்த நிலையிலும் தீர்வாக முடியாது. இந்த ஆண்டு இல்லையென்றால் அடுத்த ஆண்டு வெற்றி பெற்றுக்கொள்ளலாம் என்கிற மனநிலையுடன் நீங்கள் செயல்படவேண்டும். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாரதியார் சொன்னது போன்று அச்சமின்றி துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் மனநிலை பெற வேண்டும்.
ஒரு பரீட்சை என்பது கண்டிப்பாக உங்கள் உயிரோடு பெரிதல்ல, போன வாரம், போன மாதம் இருந்த ஒரு கவலையானது இப்போது உங்களை விட்டு போயிருக்கும். அதேபோல்தான் எந்த கவலையும் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடும். அதோடு இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நான் கூட இதுபோன்ற தோல்விகளை படிக்கிற காலத்தில் சந்தித்துள்ளேன். கேவலமான மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனபோதும் நான் நம்பிக்கையை மட்டும் கைவிட்டதில்லை.
அதனால் உங்களை துரத்தும் அச்சம், கவலை எல்லாமே படிப்படியாக மாயமாக போய் விடும். துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளுங்கள் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று மாணவ- மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக அறிவுரை வழங்கியிருக்கிறார் சூர்யா.