துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இசை அமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக மாறினார். ஆனால் இசையில் பெற்ற வெற்றியை நடிப்பில் பெற முடியவில்லை. ஜான் ஏறினால் முழும் சறுக்கிற பழமொழி அவருக்குத்தான் சரியாக பொருந்தும். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவப்பு பச்சை மஞ்சள் என்ற படம்தான் கடைசியாக அவருக்கு கவனிக்கத் தக்க படமாக அமைந்தது.
அவர் நடித்து முடித்துள்ள ஐங்கரன், ஜெயில், அடங்காதே, 4ஜி, பேச்சுலர், ஆயிரம் ஜென்மங்கள் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை படங்கள் கைவசம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள செல்பி படம் வெளிவரும் முயற்சியில் இருக்கிறது. வர்ஷா பொல்லம்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படம் ஜி.பி.பிரகாசுக்கு திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.