மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

80, 90களின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்திக். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக் தான். கார்த்திக் அவருடன் 'சோலைக்குயில்' படத்தில் கதாநாயகியாக நடித்த ராகினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவுதம், காயின் என இரு மகன்கள் உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கவுதம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது 'பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் தன்னுடைய 32வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா ராகினி, தம்பி காயின் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் கவுதம்.
தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை கார்த்திக் அதிகமாக வெளியிட்டதில்லை. கவுதம் புகைப்படங்கள் கூட அவர் நடிகரான பிறகுதான் வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் தனது அம்மா, தம்பி ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.