டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

''அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும்; சத்தியமாக எனக்கு அது கிடையாது,'' என நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் படம் செப்.9ல் தியேட்டரில் வெளியாகிறது. படம் உள்ளிட்ட விஷயம் குறித்து விஜய்சேதுபதி நேற்று அளித்த பேட்டி: 'லாபம்' படம் விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை அவர் பாணியில் வெளிப்படுத்தியுள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில், ஜனநாதன் பார்த்த கோணத்தில் படத்தை பார்க்கலாம்.
'லாபம்' என்பது எப்படி பகல் கொள்ளையாக மாறுகிறது என்பதை பொருளாதார விஞ்ஞானிகள் கூறிய விளக்கத்துடன், தன் பாணியில் இயக்குனர் படமாக்கியுள்ளார். லாபத்தை பற்றிய பாடம், இப்படம். படத்தின் க்ளைமாக்ஸ் வரை அனைத்தையும் முடித்துக் கொடுத்து விட்டு தான் ஜனநாதன் மறைந்தார். உதவிக்கு ஆட்கள் இல்லாததால் தான், அவரை இழந்து விட்டோம்.
நான் நடித்த பல படங்கள் தயாராகி, நான்கு ஆண்டுகள் ஆகியும் சட்ட சிக்கலால் வெளிவராமல் இருந்தது. தற்போது அவை வெளியாவதால் அதிக படங்கள் வெளிவரும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான படங்களை நான் தேர்வு செய்வதில்லை. கதையை சுவாரஸ்யமாக கூறவே விரும்புகிறேன். என்னால் முடிந்தது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதே.
ராமராஜன், ரஜினி, கவுண்டமணி, கனகா உள்ளிட்ட யார் இடத்தையும் நம்மால் நிரப்ப முடியாது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர்கள் செய்ததில் கால் துாசி கூட என்னால் செய்ய முடியாது. இப்போது பாதி நேரத்தை டெக்னாலஜியே சாப்பிட்டு விடுகிறது. அரசியல் போறதுக்கு அறிவு வேண்டும். அந்த அறிவு சத்தியமாக எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.




