300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சமீபத்தில் கடந்து சென்ற சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விலங்குகளை நேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் நடிகை கனிகா தனது செல்லப்பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நாய் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் தயவு செய்து நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள், நாய்களை தத்தெடுத்து அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து அன்பு செலுத்தி வளருங்கள். நம்மீது நம்பிக்கை வைத்து அளவில்லா அன்பை திருப்பி செலுத்தும் அந்தப் பிராணி கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறியுள்ள கனிகா நாய்களை எங்கே தத்தெடுக்கலாம் என்கிற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.