பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலு - இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதுப்பற்றி வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், ‛‛இது எனக்கு மறுபிறவி. மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறேன். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா சுபாஷ்கரன் மூலம் எனக்கு மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 5 படங்கள் நடிப்பேன். ஏன் 10 படங்களில் கூட நடிப்பேன். என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். முதல்வரை சந்தித்ததும் எனக்கு நல்ல காலம் பிறந்தது'' என்றார்.