காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.