மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.
குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.