சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.
குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.