லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சென்னை : சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை நேற்று(டிச.,05) உடைந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். 6 அடி உயர வெள்ளத்தில் ஒரு வயதான இரட்டை குழந்தைகளுடன் சிக்கினார்.
அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று(டிச.,06) பத்திரமாக மீட்டனர்.