மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜயகாந்த்த நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம்தான் நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தனது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
நமீதா நேற்று தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார். பின்பு மாலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “என் பிறந்தநாளையொட்டி கோயிலில் அன்னதானம், பூஜை செய்தேன். எனக்கு மகிழ்ச்சி. கேப்டன் (விஜயகாந்த்) மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று என் பிறந்தநாளின்போது கேப்டனின் ஆசீர்வாதம் வேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் கடவுளாக கருதும் அவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது என்னுடைய பாக்கியம். தமிழ்நாட்டில் நமீதாவுக்கு உயிர் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது மகிழ்ச்சி.” என்றார்.