பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கணவர் வீரேந்திராவுடன் சென்றார். முகூர்த்த தினம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நமீதா வந்ததை அறிந்த பலர், அவருடன் போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் முட்டி மோதினர். அவரும் பலருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக கிளம்பி சென்று விட்டார். முன்னதாக கோவில் தல வரலாற்றை, கோவில் புலவர் அறிவிடம், அவர் கேட்டறிந்தார்.