கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பிரபாஸின் 21வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவை அணுகியதாகவும், ஆனால் அவர் சில காரணங்களால் மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சமந்தா. இந்த நிலையில் அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சமந்தா.
“இயக்குனர் நாக் அஸ்வினிடம் எனக்கு ஏன் உங்களது படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று இப்போது அவருக்கு மெசேஜ் செய்து கேட்கப் போகிறேன், அப்படி இல்லை என்றால் இந்த படத்தில் எனக்காக நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்றும் கேட்கப் போகிறேன்” என கூறியுள்ளார் சமந்தா. இதன் மூலம் இப்போது வரை பிரபாஸ் படத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.