ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

தெலுங்கு திரையுலகில் கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். சமீபகாலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் பிரபாஸின் உதவியாளர், நடிகர் பிஷ் வெங்கட்டின் மகளை தொடர்பு கொண்டு இந்த சிகிச்சைக்கான செலவை பிரபாசே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார் என ஒரு செய்தி வெளியானது..
ஆனால் தற்போது அந்த செய்தி உண்மையல்ல என்றும், இதுவரை யாரும் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றும் பிஷ் வெங்கட்டின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். பலர் போன் செய்து விசாரிப்பதாகவும் அதில் ஒருவர் பேசும்போது தான் இப்படி நடிகர் பிரபாஸ் சிகிச்சைக்கு தேவையான பணத்தை தந்து உதவி செய்வார் என்று கூறியதாகவும், பின்னர் தான் பேசியவர் பிரபாஸின் உதவியாளர் இல்லை என்றும் தெரியவந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் இந்த தகவல் பிரபாஸுக்கு இதுவரை தெரிந்திருக்குமா என்று கூட எங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் இளம் நடிகர் விஸ்வாக் சென் இது பற்றி கேள்விப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச பணம் கொடுத்ததாகவும் பிஷ் வெங்கட்டின் குடும்பத்தினர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.