பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சுப்பிரமணிசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவின் அண்ணாமலை ஒரு புத்திசாலி. அவர் அரசியலில் நன்றாக வருவார். தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினி எம்.பி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ரஜினிக்கு அதெல்லாம் தேவையில்லை. அவருக்கு கவர்னர் பொறுப்பே வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் அரசியலில் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சத்ய நாராயணா.
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கடினம். ஆனால் பாஜகவின் அண்ணாமலை புத்திசாலி. அரசியலில் பெரிய இலக்கை அடைவார் என்று அவர் சொன்ன பதில் சோசியல் மீடியாவில் கடுமையாக விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.