ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் |
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
பொதுவாக நயன்தாரா தான் நடித்து வரும் படங்களின் எந்தவொரு விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வாறு சில படங்களில் கலந்து கொண்டாலும், இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் பேசியதில்லை. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி நேற்று டிவியில் ஒளிபரப்பானது. அதில், கையில் அணிந்துள்ள மோதிரம் வைரலானது குறித்துக் கேட்டதற்கு, தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதற்கான மோதிரம் என்று குறிப்பிட்டார் நயன்தாரா.
மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய டிடி அடுத்த கேள்வியாக திருமணம் செய்வீர்களா அல்லது லிவ் லின் டுகெதரா எனக் கேட்க, “நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன். ஆனால், அனைவருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன். இதற்கு மேல் எதையும் கேட்காதே டிடி” எனக் கூறியுள்ளார்.