வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு |
இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு வேறு படத்தை இயக்க டைரக்டர் ஷங்கர் செல்லக்கூடாது என்று லைகா நிறுவனம் நீதி மன்றத்தில் தடை கோரியது. அதையடுத்து நடந்த விசாரணைக்குப்பிறகு தனி நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன்காரணமாக ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்த தான் இயக்கும் படவேலைகளை தொடங்கிருக்கிறார் ஷங்கர். அதோடு இந்தபடத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்து ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்பு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் இருந்து தனி நீதிபதியின் உத்தரவை நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதிகளின் அமர்வு,லைகாவின் மேல்முறையீட்டு வழக்கின் மனுவில் தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணை நடத்த பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் லைகா நிறுவனத்தின் இந்த மேல்முறையீடு மனு குறித்த வழக்கு விசாரணை வரும் போது அதில் வரும் தீர்ப்பை பொறுத்து ஷங்கரின் பிற மொழி படங்களின் விஷயத்தில் மாற்றம் நிகழலாம்.