சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெய்பீம். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா சற்றே நீண்ட சிறப்பு தோற்றத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்த படம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்த்ரு பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கிறஞராக இருந்தபோது ஒரு மலைவாழ் பெண்ணின் வழக்கை எடுத்து வாதாடி வெற்றி பெற்றார். அந்த வழக்கை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இதில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு பணியாற்றி உள்ளார்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் கதையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே கதை. என்று அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.