புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
அம்மன் போல மேக்கப் போட்டு நடிகை ரேகா எடுத்திருக்கும் புதிய போட்டோஷூட் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. பார்ப்பதற்கு ரேகா என அடையாளமே தெரியாத வகையில் அந்த புகைப்படங்கள் உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரேகா பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார், முதல் ஆளாக விரைவிலேயே எலிமினேட் ஆனாலும், ரேகாவிற்கு அந்த நிகழ்ச்சி ஒரு கம்பேக் போலவே அமைந்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கி வரும் ரேகா, சொந்தமாக யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் அம்மன் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அதிலிருப்பது உண்மையான அம்மனின் ஓவியம் போல உள்ளதே தவிர, ரேகாவை பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த புகைப்படம் வந்துள்ளது.
இந்த போட்டோஷூட் குறித்து தனது யூ-டியூபில் பேசியுள்ள ரேகா, அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும், கே.ஆர்.விஜயாவும், நயந்தாராவும் தான் தனது அம்மன் கதாபாத்திரத்திற்கான உத்வேகம் எனவும் அவர் கூறியுள்ளார்.