திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த நிறுவனம். மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க 'எல் 2 எம்புரான்' படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதிக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் பதிவிடவில்லை. மேலும், முன்னரே அறிவித்தபடி மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்குப் பதிலாக கோகுலம் சினிமாஸ் நிறுவனம் உள்ளே நுழைந்துள்ளது. நடிகர் மோகன்லால் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில் லைக்கா நிறுவனத்தை அவர் 'டேக்' செய்யவில்லை. பட வெளியீட்டு விவகாரத்தில் லைக்கா நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.