நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! |

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த நிறுவனம். மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க 'எல் 2 எம்புரான்' படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதிக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் பதிவிடவில்லை. மேலும், முன்னரே அறிவித்தபடி மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்குப் பதிலாக கோகுலம் சினிமாஸ் நிறுவனம் உள்ளே நுழைந்துள்ளது. நடிகர் மோகன்லால் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில் லைக்கா நிறுவனத்தை அவர் 'டேக்' செய்யவில்லை. பட வெளியீட்டு விவகாரத்தில் லைக்கா நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.