இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கேரளாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. இது குறித்து நடிகை சுவாசிகா நேர்காணல் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: திருமண வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன்.
இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது சிறந்த வழியாகும். தற்கொலை செய்து கொள்வது கொடுமையானது.
விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. பெண்கள் மோசமான வாழ்க்கைக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சினைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.