எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர். அதேசமயம் இன்னொரு பக்கம் அதே சோஷியல் மீடியாவை பயன்படுத்தி நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்தவகையில் கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை வாங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து சோஷியல் மீடியா மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். ரசிகர்களும் ஆர்வமாக முன்வந்து உதவி செய்தனர்.
தற்போது அந்த மாணவர்களுக்கு 8 டேப்லெட்டுகள், 7 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மாளவிகா. மேலும் அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்டர்நெட் வசதியையும் ஏற்படுத்தி தர விரும்பியுள்ள மாளவிகா மோகனன். அதற்காகவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.