ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கிறார். தமிழில் அவர் கைவசம் உள்ள படம், எஸ்.பி.ஜனநாதனின் லாபம். தெலுங்கில் இந்த வருடம் அவரது நடிப்பில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியான மற்றுமொரு தெலுங்குப் படம் ரவி தேஜாவின் கிராக். ஹிந்தியில் தி பவர் படத்திலும் நடித்திருந்தார். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் சலார் திரைப்படத்திலும் இவர் தான் நாயகி.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : நான் ஒரு உளவியல் மாணவி. நான் கல்லூரியை விட்டுப் பாதியில் வெளியேறினாலும் உளவியல் படிப்பைத் தொடர்ந்தேன். மனநல ஆலோசகர்கள் பலர் என் நண்பர்களாக இருக்கின்றனர். சிறு வயதிலும் இப்போதும் நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியோ அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. நமக்கு வயிற்று வலி ஏற்பட்டால் முதல் நாள் காரமான பொருட்களைத் தவிர்த்து விடுவோம். இரண்டாவது நாள் வீட்டிலேயே இருக்கும் சாப்பிடுவோம். மூன்றாவது நாளும் வலி தொடர்ந்தால் தான் மருத்துவரிடம் சென்று உதவி கேட்போம். ஆனால், மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காததுபோல தலையைத் தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமானது. மன நலனை பொறுத்தவரை தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் தெரிவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.