இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆந்திராவிலும் படப்பிடிப்பு நடத்த, அந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரள அரசு இப்போது வரை அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம் பாரபட்சமாக சீரியல் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து சினிமா தொழிலாளர் அமைப்பின் தலைவரான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் மோகன்லால் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புரோ டாடி உள்பட பெரிய படங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்துவதற்காக தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி கிளம்பி விட்டார்கள்.