மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆந்திராவிலும் படப்பிடிப்பு நடத்த, அந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரள அரசு இப்போது வரை அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம் பாரபட்சமாக சீரியல் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து சினிமா தொழிலாளர் அமைப்பின் தலைவரான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் மோகன்லால் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புரோ டாடி உள்பட பெரிய படங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்துவதற்காக தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி கிளம்பி விட்டார்கள்.