திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, சிவா இயக்கத்தில் தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பும் டப்பிங் பணியும் இருக்கின்றன. வரும் 12ந்தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. கோல்கட்டாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. எனவே ரஜினி கோல்கட்டா செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து 170வது படமாக மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.