லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி, சிவா இயக்கத்தில் தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பும் டப்பிங் பணியும் இருக்கின்றன. வரும் 12ந்தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. கோல்கட்டாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. எனவே ரஜினி கோல்கட்டா செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினியின் 169வது படமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து 170வது படமாக மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.