இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. ஏராளமான ஆவணப் படங்களை இயக்கி உள்ள இவர் செங்கடல் என்ற படத்தை இயக்கினார். தற்போது அவர் மாடத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நீ ஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் பைரசியாகவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை தனது டுவிட்டரில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பைரசியில் படம் பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. நீ ஸ்ட்ரீம் தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும். என்று கூறியுள்ளார்.