பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எப் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகிறது. படத்தை வாங்க ஓடிடி தளங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நேரத்தில் படத்தின் இசை உரிமம் 7 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளின் இசை உரிமையை லஹரி மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் இணைந்து வாங்கி உள்ளது.
படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று ஏற்கெனவே தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.