பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரஜினியின் அமெரிக்க பயணம், அவரது உடல்நல பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார் நடிகை கஸ்தூரி. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ‛‛அலைபேசியில் விவரத்தை சொன்னார்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. நல்ல விஷயம் காத்திருக்கிறது. தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்'' என கஸ்தூரி டுவீட் செய்தார்.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில், ‛‛தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்'' தெரிவித்துள்ளார்.
இதற்கு, ‛‛என்னை அழைத்து பேசியது கங்கை அமரன். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை'' என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
ரஜினிவை வைத்து கஸ்தூரி ஏற்படுத்திய கலகம் சமூகவலைதளங்களில் மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. இதை வைத்து கஸ்தூரியை மீண்டும் ரசிகர்கள் வசை பாட தொடங்கிவிட்டனர்.