புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி அசுரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். தனுஷ் நாயகனாக நடித்த அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு தனுசுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
அதையடுத்து தற்போது சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் விஜய் சேதுபதி கைதியாக நடிக்க கவுதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இயக்குகிறார் வெற்றிமாறன்.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி உருவாகிறது. ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்த கதைக்களத்தில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக நாவல் மற்றும் சிறுகதைகளை தழுவி படங்கள் இயக்கி வரும் வெற்றிமாறன், இதன்பிறகு படமாக்குவதற்கும் சில கதாசிரியர்களின் கதையை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.