லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னபூரணி என்கிற படம் வெளியானது. பின்னர் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள், வசனங்கள் இந்து மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த படம் சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சென்சார் அதிகாரிகள் பார்த்து ஏற்கனவே சான்றிதழ் அளித்த ஒரு படத்தை குறிவைத்து இப்படி தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “வெற்றிமாறனின் கருத்து வரவேற்கப்படுகிறது. இதே போன்ற கருத்தை கேரள ஸ்டோரி படம் வெளியான சமயத்திலும் அவர் வெளிப்படுத்தி இருந்தால் சினிமா மீது அவர் நிஜமாகவே அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்பது உறுதியாகி இருக்கும். ஆனால் அவர் அன்னபூரணிக்காக மட்டும் குரல் கொடுப்பதை பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. சினிமா ரசிகனாக இருங்கள் வெற்றிமாறன்” என்று கூறியுள்ளார்.
பேரரசுவின் இந்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.