அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

தமிழ் சினிமா வசூல் நடிகர்களில் ஒருவரான விஜய், அரசியலில் இறங்கிவிட்டார். தற்போது நடித்து வரும் 'கோட்' படத்திற்குப் பிறகு அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் 69வது படமாக, அவரது கடைசி படமாக உருவாக உள்ள அந்தப் படத்தை 'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போகிறார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பலரும் பல பெயரைச் சொல்லி வருகிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி, தமிழ் இயக்குனர்கள் அட்லீ, வினோத், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அந்தப் போட்டியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தகவலின்படி வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்வியில், “நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா இணைந்து படம் பண்ணனும்னு பேசிக்கிட்டேதான் இருக்கோம். விஜய் சார் வந்து ரெடியாதான் இருக்காரு. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ்லாம் இருக்கு, அதெல்லாம் முடிச்சிட்டு பண்ணுவேன். அந்த நேரத்துல நான் சொல்ற கதைகள் அவருக்கு வொர்க் ஆச்சின்னா, கண்டிப்பா செய்வோம்,” என்று பேசியிருந்தார்.
தனது இயக்கத்தில் விஜய் நடிக்க விருப்பமாக இருக்கிறார் என்பதை அப்போது வெளிப்படுத்தி இருந்தார் வெற்றிமாறன். கடந்த வருடம் மாணவர்களுக்கு விஜய் உதவி செய்த நிகழ்ச்சியில் பேசிய போது. ''அசுரன்' படத்தில் படிப்பு குறித்து வரும் ஒரு வசனம்தான் இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்குக் காரணமாக இருந்தது,” என்று பாராட்டியிருந்தார்.
அரசியலில் இறங்குவதால் தனது கடைசி படத்தை சமூக அக்கறையுள்ள ஒரு படமாக விஜய் கொடுக்க நினைத்தால் அவரது இயக்குனர் தேர்வில் வெற்றிமாறனும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.