அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் நடிகை இலியானா.. இளம் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து வந்த இலியானா ஒருகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் தெலுங்கு சினிமாவை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டில் செட்டிலானார். ஆனாலும் இலியானாவால் அங்கே பெரிதாக சாதிக்க முடியவில்லை..
கடந்த 2018ல் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.. இதற்கு பின்னணியில் ஷாக்கிங்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.
அதாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இலியானா திருப்பி தரவில்லை. இதனால் தமிழில் அவருக்கு மறைமுக ரெட்கார்டு போடப்பட்டதுடன், தெலுங்கு தயரிப்பாளர்கள் சங்கத்திடமும் இந்த தகவலை கூறியுள்ளனர். ஏற்கனவே இலியானாவின் சில அடாவடிகளால் கடுப்பில் இருந்த தெலுங்கு திரையுலகமும் அவர் மீது மறைமுக ரெட்கார்டு போட்டு, இப்போது வரை அது தொடர்ந்து வருகிறதாம்..